பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தில் பலி

Friday, 23 February 2018 - 16:26

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3+%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காவற்துறை விசேட அதிரடி படையினர் வத்தளை நகரில் சிற்றூந்து ஒன்றை பரிசோதனை செய்த போது சிற்றூந்தில் இருந்த சிலர் காவற்துறை அதிரடி படையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, காவல்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட பதில் தாக்குலில்  டி. மஞ்சு என்ற  நபர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்துள்ள நபரின் சடலம் றாகம மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.