இந்திய அணியின் தலைவர் மாற்றம்..!!

Saturday, 24 February 2018 - 13:13

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21%21
இலங்கையில் இடம்பெறவுள்ள சுதந்திரக் கிண்ண முத்தரப்பு கிரிக்கட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ரோஹிட் சர்மா தலைமை தாங்க உள்ளார்.
 
இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையை மேற்கோள்காட்டி அந்நாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
 
அணித் தலைவர் விராட் கோலி, மஹேந்திர சிங் டோனி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரிட் பும்ரா  மற்றும் ஹர்திக் பாண்டியா முதலான முக்கிய வீரர்களுக்கு  இந்தத் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
 
தென்னாபிரிக்காவுடனான இந்திய தொடர் இன்றுடன் நிறைவுக்கு வருகிறது.
 
இந்த நிலையில், முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்க வீரர்களுக்கும், இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபைக்கும் இடையில் ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.