சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புகையிலை பொருட்களுடன் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
வானூர்தி தள சுங்க திணைக்கள அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்த அவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் நீர்கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.