பப்புவா நியூ கினியா தீவில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இந்த நிலநிடுக்கத்தை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் எங்கா (Enga) மாகாணத்தின் போர்கெரா (Porgera) பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிலுள்ள சில இடங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இதேவேளை, பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2 ஆயிரத்து 100 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று நள்ளிரவு இடம்பெற்ற இந்த நிலநிடுக்கத்தை அடுத்து ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் எங்கா (Enga) மாகாணத்தின் போர்கெரா (Porgera) பகுதியில் இருந்து சுமார் 90 கிலோ மீட்டர் தொலைவிலும், கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்திலும் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிலுள்ள சில இடங்களில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
இதேவேளை, பப்புவா நியூ கினியாவில் கடந்த 1998ஆம் ஆண்டு ஏற்பட்ட 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் காரணமாக மூன்று முறை சுனாமி ஏற்பட்டு, சுமார் 2 ஆயிரத்து 100 பேர் வரையில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.