எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியுள்ளது.
இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை 2 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பங்களாதேஷ் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி , களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் , அணித்தலைவர் திசர பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட மொஹமட் மொஹமதுல்லா இறுதி வரை ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி , எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை 2 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பங்களாதேஷ் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.
அதன்படி , களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் , அணித்தலைவர் திசர பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.
பங்களாதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.
பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட மொஹமட் மொஹமதுல்லா இறுதி வரை ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
அதன்படி , எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.