சுதந்திர கிண்ணம் - இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி இறுதிப்போட்டிக்கு தெரிவு

Friday, 16 March 2018 - 22:48

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81
எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் இறுதிப்போட்டிக்கு பங்களாதேஷ் அணி தெரிவாகியுள்ளது.

இன்று இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணியை 2 விக்கட் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் பங்களாதேஷ் அணி இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

கொழும்பு  ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்தது.

அதன்படி , களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  7 விக்கட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா 61 ஓட்டங்களையும் , அணித்தலைவர் திசர பெரேரா 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்து வீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் இரண்டு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட் இழப்பிற்கு வெற்றி இலக்கை அடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் தமிம் இக்பால் 50 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.

பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு வித்திட்ட மொஹமட் மொஹமதுல்லா இறுதி வரை ஆட்டமிழக்காது 43 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் அகில தனஞ்சய 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி , எதிர்வரும் 18ம் திகதி இடம்பெறவுள்ள சுதந்திர கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.