சுதந்திர கிண்ண இருபதுக்கு இருபது போட்யில் இலங்கை அணி மற்றும் பங்களாதேஷ் அணிக்கு இடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற போட்டியில் இடம்பெற்ற பதற்ற நிலைமை குறித்து சர்வதேச கிரிக்கட் கவுன்சிலினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற போட்டியில் இறுதி ஓவரில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன், பங்களாதேஷ் அணி நடுவர்களுக்கு எதிராகவும் தமது எதிர்ப்பை வெளியிட்டதினால் போட்டி சற்று தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.
இறுதி ஓவரில் 4 பந்துக்களுக்கு 12 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், வீசப்பட்ட பந்து தவறானது என நடுவரினால் தீர்ப்பு வழங்கப்படாமையினால் பங்களாதேஷ் அணி தலைவர் சக்கிப் அல் ஹசன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களை வரவழைக்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் பங்களாதேஸ் அணி வீரர்கள் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், இரு பந்துகளுக்கு ஆறு ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில் வெற்றி இலக்கையடைந்தனர்.
இந்நிலையில் ஓய்வறைக்கு சென்ற அவ்வணி வீரர்கள் ஒய்வறையின் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல் கிரிக்கட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கட் கவுன்சில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
இது குறித்த காணொளி இணைப்பு....
rnrnrnrnrn rnrnrnrnrn
rnrnrnrnrn rnrnrnrnrn
நேற்று இடம்பெற்ற போட்டியில் இறுதி ஓவரில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன், பங்களாதேஷ் அணி நடுவர்களுக்கு எதிராகவும் தமது எதிர்ப்பை வெளியிட்டதினால் போட்டி சற்று தாமதமாகியமை குறிப்பிடத்தக்கது.
இறுதி ஓவரில் 4 பந்துக்களுக்கு 12 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில், வீசப்பட்ட பந்து தவறானது என நடுவரினால் தீர்ப்பு வழங்கப்படாமையினால் பங்களாதேஷ் அணி தலைவர் சக்கிப் அல் ஹசன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வீரர்களை வரவழைக்க முயன்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மீண்டும் பங்களாதேஸ் அணி வீரர்கள் துடுப்பெடுத்தாட தீர்மானித்ததுடன், இரு பந்துகளுக்கு ஆறு ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த நிலையில் வெற்றி இலக்கையடைந்தனர்.
இந்நிலையில் ஓய்வறைக்கு சென்ற அவ்வணி வீரர்கள் ஒய்வறையின் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பங்களாதேஷ் வீரர்களின் இந்த செயல் கிரிக்கட் உலகை முகம் சுளிக்க வைத்துள்ளதாக கிரிக்கட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து சர்வதேச கிரிக்கட் கவுன்சில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது
இது குறித்த காணொளி இணைப்பு....
rnrnrnrnrn rnrnrnrnrn
rnrnrnrnrn rnrnrnrnrn