2019ம் ஆண்டு உலக கிண்ணத் தொடருக்கு இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் மற்றும் தினேஸ் சந்திமால் ஆகியோரின் பங்களிப்பு அத்தியாவசியம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் வீரர் அரவிந்த டீ சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அஞ்சலோ மெத்தீவ்ஸ் இலங்கையில் உள்ள மிகச்சிறந்த சகல துறை வீரராக உள்ளார்.
அத்துடன் தினேஷ் சந்திமாலின் கிரிக்கட் அறிவும் இலங்கைக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
இதற்கிடையில், நடைபெற்று வரும் சுதந்திர கிண்ண தொடரில் இருந்து இலங்கை அணி வெளியேற நேர்ந்துள்ளது.
ஆனாலும் 2017ம் ஆண்டு பெற்ற தோல்விகளில் இருந்து, தற்போது இலங்கை அணி கண்டுள்ள முன்னேற்றமானது, எதிர்கால இலங்கை கிரிக்கட் குறித்த நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுதந்திர கிண்ண தொடரின் இறுதி போட்டி இன்றைய தினம் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதற்ற நிலைமை குறித்த காணொளி இணைப்பு
விளையாட்டரங்கில் இடம்பெற்ற பதற்ற நிலைமை குறித்த காணொளி இணைப்பு
rnrn rnrnrn