தினேஸ் கார்த்திக் எப்படி பட்டவர் தெரியுமா?? வௌிப்படுத்திய ரோஹித் சர்மா..!!

Monday, 19 March 2018 - 15:21

+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F%3F+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE..%21%21

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆடுவதற்கு தினேஸ் கார்த்திக் தயாராக உள்ளார் என இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நேற்று நடைபெற்று முடிந்த சுதந்திரக் கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரில் இந்தியா அணி கிண்ணத்தை சுவீகரித்தது.

அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா இதனைத் தெரிவித்திருந்தார்.

எவ்வாறான நிலைமைகளிலும் தினேஸ் கார்த்திக் ஆடுவதற்கு தயார் நிலையில் இருப்பார் என புகழாரம் சூட்டியுள்ள அவர் துடுப்பாட்ட வரிசையில் முன்னால் சென்று ஆடுவதற்கு கார்த்திக் மெய்யாகவே விரும்பிய போதிலும் அணியின் நலனைக் கருத்திற்கொண்டு, அவரை இறுதி ஒவர்களில் துடுப்பெடுத்தாட தக்க வைத்துக்கொண்டோம் என குறிப்பிட்டார்.

தினேஸ் கார்த்திக் தன்து அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார் என ரோஹித் சர்மா இதன்போது குறிப்பிட்டார்.