சுதந்திர கிண்ணத்தின் பின்னர் இந்த வீரர்களின் திறமைக்கு கிடைத்துள்ள பரிசு..!!

Tuesday, 20 March 2018 - 15:27

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81..%21%21
கடந்த தினத்தில் இடம்பெற்ற சுதந்திர கிண்ண தொடரில் இலங்கை அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா மற்றும் குசல் மெந்திஸ் ஆகியோர் ஐசிசியின் இருபதுக்கு இருபது துடுப்பாட்ட தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

அதன்படி, குசல் ஜனித் பெரேரா இருபது இடங்கள் முன்னேறி 20வது இடத்தை பிடித்துள்ள நிலையில் , குசல் மெந்திஸ் 27 இடங்கள் முன்னேறி 48வது இடத்தை பிடித்துள்ளார்.

குசல் ஜனித் பெரேரா  சுதந்திர கிண்ண தொடரில் அதிக ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் , அவர் 204 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சுதந்திர கிண்ண தொடரில் இந்திய அணிசார்பில் சிறப்பாக பந்துவீச்சு திறமைகளை வௌிப்படுத்திய வொசிங்டன் சுந்தர் மற்றும் யுஸ்வேந்திர சஹால் இருபதுக்கு இருபது பந்து வீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் பாரிய முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

சஹால் 12 இடங்கள் முன்னேறி 2ம் இடத்தை கைப்பற்றியுள்ளதுடன் , வொசிங்கடன் சுந்தர் 151 இடங்கள் முன்னேறி 31 வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்த போட்டித் தொடரில் தனது திறமைகளை வௌிப்படுத்திய இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சய இந்த தரப்படுத்தலில் 35வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.