சிறுமி ஒருவரின் காதலை புறக்கணித்தமையினால் இளைஞர் ஒருவர் மீது சிறுமி, எசிட் தாக்குதல் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று வெளிநாட்டு ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் பங்களாதேஸ் - டாக்கா நகரில் பதிவாகியுள்ளது.
17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு எசிட் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு எசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்ககள் இளைஞரிடம் தனது காதலை வெளிப்படுத்தி வந்துள்ள நிலையில், இளைஞர் அதனை மறுத்து வந்துள்ளமை அறியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் குறித்த இளைஞர் சென்று கொண்டிருந்துள்ள போது எசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் இளைஞரின் முகத்தில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த சம்பவம் பங்களாதேஸ் - டாக்கா நகரில் பதிவாகியுள்ளது.
17 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு எசிட் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு எசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்ககள் இளைஞரிடம் தனது காதலை வெளிப்படுத்தி வந்துள்ள நிலையில், இளைஞர் அதனை மறுத்து வந்துள்ளமை அறியவந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது நண்பர்களுடன் குறித்த இளைஞர் சென்று கொண்டிருந்துள்ள போது எசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடனடியாக இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ள நிலையில் இளைஞரின் முகத்தில் கடும் தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சம்பவம் தொடர்பில் அந்த நாட்டு காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.