கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரசாங்கம் நல்லிணக்கத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதனை வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு மனித உரிமை மாநாட்டில் தெளிவுபடுத்தியுள்ளதாக அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை மாநாட்டில் பங்குகொண்டுள்ள நிலையில், எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படும் என்பதை அரசாங்கத்தின் சார்பில் தெளிவாக வலியுறுத்தியுள்ளதாக அவர் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.