Monday, 16 April 2018 - 13:34
இலங்கைக்கும், ஈரானுக்கும் இடையிலான கைதிப்பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஒப்புதல்
இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் குற்றவாளிகளை பரிமாற்றிக் கொள்வதற்கான கைதிப்பரிமாற்ற சட்டமூலம் ஒன்றிற்கு ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஈரானிய ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
இந்த சட்ட ஏற்பாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் குற்றவாளிகள் மற்றும் குற்றங்கள் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
15 ஈரான் நாட்டவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அதேவேளை, 3 இலங்கையர்கள் ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய சட்டத்துறையைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உடன்படிக்கை அமுலாக்கப்படுவதன் ஊடாக, குறித்த குற்றவாளிகளை தங்கள், தங்கள் நாடுகளில் தடுத்து வைப்பதற்கான வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.