தமிழ் சினிமாவின் 51வது வருட ஸ்டண்ட் யூனியன் விழாவில் கலந்துகொண்ட 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, இரத்த தானம் செய்துள்ளார்.
தமிழ் சினிமா ஸ்டண்ட் யூனியன் தொடங்கி இன்றுடன் 51 வருடங்கள் ஆகின்றன.
இதை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டண்ட் யூனியனுக்கு ஒரு இலட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதன்போது , எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில், ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், ஏராளமான உறுப்பினர்கள் இரத்த தானம், கண் தானம் செய்தனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இரத்த தானம் செய்தார்.
படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காகத் தினம் தினம் எவ்வளவோ இரத்தத்தை நீங்கள் இழந்துகொண்டு இருக்கிறீர்கள் என தெரிவித்த விஜய் சேதுபதி ,
உங்கள் விழாவில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்ததை, நான் உங்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா ஸ்டண்ட் யூனியன் தொடங்கி இன்றுடன் 51 வருடங்கள் ஆகின்றன.
இதை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு ஸ்டண்ட் யூனியனுக்கு ஒரு இலட்ச ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதன்போது , எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில், ஸ்டண்ட் யூனியன் உறுப்பினர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும், ஏராளமான உறுப்பினர்கள் இரத்த தானம், கண் தானம் செய்தனர்.
இந்த விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இரத்த தானம் செய்தார்.
படப்பிடிப்பின்போது சண்டைக் காட்சிகளில் எங்களுக்காகத் தினம் தினம் எவ்வளவோ இரத்தத்தை நீங்கள் இழந்துகொண்டு இருக்கிறீர்கள் என தெரிவித்த விஜய் சேதுபதி ,
உங்கள் விழாவில் கலந்துகொண்டு இரத்த தானம் செய்ததை, நான் உங்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாக நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.