புதிய ஒப்பந்தத்தை தயாரிக்கும் பணி முன்னெடுப்பு

Friday, 20 April 2018 - 19:19

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய தேசிய அரசாங்கத்தை முன்கொண்டு செல்வதற்கான புதிய ஒப்பந்தத்தை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொது செயலாளர் மகிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தாயகம் திரும்பியதன் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அங்குனுகொலபெலச பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.