இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கட் 20 ஓவர் போட்டி தொடரின் இன்று நடைபெறும் போட்டியில் மகேந்திரசிங் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அஜின்கியா ரகானேயின் வழி நடத்தலிலான ராஜஸ்தான் ரோயல் அணி எதிர்கொள்கின்றது.
இன்று இரவு புனேயில் நடைபெறும் இந்த போட்டி, 17வது லீக் ஆட்டமாகும்.
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெறவிருந்த இந்த போட்டி, காவேரி நதி நீர் போராட்டம் காரணமாக புனேக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 3 போட்டிகளில் பங்கு கொண்டு 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் விளையாடுவதை மகேந்திரசிங் தோனியின் அணி தவற விட்ட போதிலும், அவர்களை உற்சாகப்படுத்த விசேட தொடரூந்து மூலம் சென்னையில் இருந்து ஆயிரம் ரசிகர்கள், புனேக்கு ஏற்கனவே சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று இரவு புனேயில் நடைபெறும் இந்த போட்டி, 17வது லீக் ஆட்டமாகும்.
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் விளையாட்டுத் திடலில் நடைபெறவிருந்த இந்த போட்டி, காவேரி நதி நீர் போராட்டம் காரணமாக புனேக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 3 போட்டிகளில் பங்கு கொண்டு 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னையில் விளையாடுவதை மகேந்திரசிங் தோனியின் அணி தவற விட்ட போதிலும், அவர்களை உற்சாகப்படுத்த விசேட தொடரூந்து மூலம் சென்னையில் இருந்து ஆயிரம் ரசிகர்கள், புனேக்கு ஏற்கனவே சென்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.