26 வயது மகள் தந்தைக்கு செய்த கொடூரம்!!

Thursday, 26 April 2018 - 15:28

26+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21
தகாத உறவை கண்டித்த தந்தையை மகளே விஷம் வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் - ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு வயது 52.

நல்ல உடல் நிலையில் இருந்த இவர் திடீரென இரண்டு தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.

இதனால் கருப்பையாவின் மரணத்தில் வீட்டில் உள்ளோருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து இதுகுறித்து கருப்பையாவின் குடும்பத்தினர் காவற்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மரணத்தில் சந்தேகம் எழுந்ததால் கருப்பையாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கருப்பையாவின் உடலில் விஷம் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து கருப்பையா மரணம் தொடர்பாக வீட்டில் உள்ளோரிடம் சிக்கல் காவல்நிலைய விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது தனது தகாத உறவை கண்டித்ததால் தந்தையை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றதாக அவரது மகள் முருகேஸ்வரி காவற்துறையிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து முருகேஸ்வரியை காவற்துறையினர் கைது செய்தனர்.

முருகேஸ்வரிக்கு தற்போது 26 வயது ஆகிறது.

ஏற்கெனவே திருமணம் ஆகி முருகேஸ்வரிக்கு குழந்தையும் உள்ளது.

கணவர் வெளி இடத்தில் வேலை செய்யும் நிலையில் வேறுஒரு நபருடன் முருகேஸ்வரிக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனையடுத்து முருகேஸ்வரியை பலமுறை கருப்பையா கண்டித்திருக்கிறார்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தை என்றும் பாராமல் முருகேஸ்வரி கருப்பையாவை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளார்.