மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அதிரடி கருத்து..!!

Sunday, 20 May 2018 - 9:52

%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21%21
எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தவொரு தேர்தலுக்கும் முகங்கொடுக்கத் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
கொழும்பு – விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற இராணுவ நினைவு நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்த நடவடிக்கை எடுத்தால் மிகச் சிறந்ததாகும்.
 
எனினும், அதற்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை அதிகாரம் அவசியமாகும்.
 
சில இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறுகிய நோக்கத்தில் சிந்தித்தால், வாக்களிக்கமாட்டார்கள்.
 
எனவே, ஜனாதிபதித் தேர்தல் மிக விரைவில் நடத்தப்பட்டால் அதற்கு முகங்கொடுக்கத் தயார் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.