இலங்கை கிரிக்கட் வீரர்களின் வேதனம் அதிகரிப்பு
2018 - 2019 நிதியாண்டின் இலங்கை கிரிக்கட் வீரர்களின் வேதனம் 34 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை கிரிக்கட் நிறுவனம் சிறந்த வருமானத்தை பெற்றுள்ள காரணத்தால் இவ்வாறு வீரர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரக்கட் வீரர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய ஒப்பந்தம் இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.
குறித்த ஒப்பந்ததை வௌியிட்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் வீரர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , இம்முறை ஒப்பந்ததத்தில் 34 வீரர்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
2018 - 2019 நிதியாண்டின் இலங்கை கிரிக்கட் வீரர்களின் வேதனம் 34 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் இலங்கை கிரிக்கட் நிறுவனம் சிறந்த வருமானத்தை பெற்றுள்ள காரணத்தால் இவ்வாறு வீரர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை கிரக்கட் வீரர்களின் சம்பள உயர்வு தொடர்பான புதிய ஒப்பந்தம் இன்று இலங்கை கிரிக்கட் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது.
குறித்த ஒப்பந்ததை வௌியிட்டு கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் வீரர்களின் வேதனம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
எவ்வாறாயினும் , இம்முறை ஒப்பந்ததத்தில் 34 வீரர்கள் மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.