ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானிய படையினர் எல்லைமீறி தாக்குதல் நடத்தி இருப்பதாக இநதிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பொதுமக்களது இல்லங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன் சேதவிபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை.
ஏற்கனவே இந்திய – பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையை மீறி, நேற்றையதினம் காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இதில் 5 பொதுமக்கள் பலியானதாக இந்தியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் பாகிஸ்தானின் தரப்பில் இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.