பாகிஸ்தானிய படையினர் எல்லைமீறி தாக்குதல்..?

Thursday, 24 May 2018 - 8:17

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..%3F
ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானிய படையினர் எல்லைமீறி தாக்குதல் நடத்தி இருப்பதாக இநதிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
பாராமுல்லா மாவட்டத்தின் உரி பகுதியில் பொதுமக்களது இல்லங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
 
இதன் சேதவிபரங்கள் இன்னும் வெளியாக்கப்படவில்லை.
 
ஏற்கனவே இந்திய – பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையை மீறி, நேற்றையதினம் காஷ்மீரின் சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களில் பாகிஸ்தானிய படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில் 5 பொதுமக்கள் பலியானதாக இந்தியாவின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 
 இது தொடர்பில் பாகிஸ்தானின் தரப்பில் இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.