ETI நிதியில் வாங்கிய முத்துக்கருப்பன் செட்டியார் நிறுவனத்தை மீட்டெடுக்க வேண்டும் - வைப்பாளர்கள் அரசுக்கு கோரிக்கை

Friday, 25 May 2018 - 17:56

ETI+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
தமது வைப்பு பணத்தை கொண்டு ETI நிறுவனத்தின் பணிப்பாளர் குழு முத்துக்கருப்பன் செட்டியார் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ளதாக வைப்பாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

எவ்வாறாயினும் , குறித்த நிறுவனத்தை வேறொரு நிறுவனமாக அடையாளப்படுத்த ETI பணிப்பாளர் குழு முயற்சிப்பதாக வைப்பாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ETI நிறுவனத்தை போன்று முத்துக்கருப்பன் செட்டியார் நிறுவனத்தில் உள்ள நாலக எதிரிசிங்க மற்றும் ஜீவக எதிரிசிங்க ஆகியன பணிப்பாளர் குழுவை சேர்ந்தவை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தமது வைப்பு பணத்திற்கு ETI நிறுவன பணிப்பாளர் குழு பொறுப்புக்கூற வேண்டும் எனவும் தமது பணத்தை கொண்டு குறித்த நிறுவனத்தை வாங்கியுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உடனடியாக இந்த நிறுவனத்தை மீட்டெடுக்க அரசு தலையிட வேண்டும் என வைப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதனை மீட்டெடுத்து தமது பணத்தை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறு ETI நிறுவனத்தில் பண வைப்பு செய்த வாடிக்கையாளர்கள் கோரியுள்ளனர்.