2 பேர் கைது..

Sunday, 27 May 2018 - 11:46

+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..
ஹோமாகம - முல்லேகம பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் ஹெரோயின் போதை பொருள் 760 மில்லி கிராமை கைவசம் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துருகிரிய காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் நேற்றைய தினம் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 23 மற்றும் 36 வயதுடையவர்கள் என்பதுடன் ஹோமாகம பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துருகிரிய காவற்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேக நபர்கள் இன்றைய தினம் ஹோமாகம நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.