ரஷ்யாவில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்றைய தினம் மூன்று போட்டிகள் இடம்பெற்றன.
பிரிவு ஈ யில் இடம்பெற்றுள்ள கொஸ்டாரிக்கா மற்றும் செர்பியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், செர்பிய அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் கொல்டாரிக்காவை தோற்கடித்தது.
அதே பிரிவில், பிரேசில் மற்றும் சுவிசர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவு பெற்றது.
அதுபோல், பிரிவு எப் பில் இடம்பெற்ற போட்டியில் ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகள் பங்குகொண்ட நிலையில், மெக்சிகோ அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.
இதனிடையே, இன்றைய தினம் மேலும் மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன.
பிரிவு எப் பில் சுவீடன் மற்றும் தென்கொரிய அணிகளுக்கு இடையிலான போட்டியும், பிரிவு ஜீ பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியும், துனிசியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.
பிரிவு ஈ யில் இடம்பெற்றுள்ள கொஸ்டாரிக்கா மற்றும் செர்பியா அணிகளுக்கு இடையிலான போட்டியில், செர்பிய அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் கொல்டாரிக்காவை தோற்கடித்தது.
அதே பிரிவில், பிரேசில் மற்றும் சுவிசர்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஒன்றுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் சமநிலையில் நிறைவு பெற்றது.
அதுபோல், பிரிவு எப் பில் இடம்பெற்ற போட்டியில் ஜெர்மனி மற்றும் மெக்சிகோ அணிகள் பங்குகொண்ட நிலையில், மெக்சிகோ அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது.
இதனிடையே, இன்றைய தினம் மேலும் மூன்று போட்டிகள் இடம்பெறவுள்ளன.
பிரிவு எப் பில் சுவீடன் மற்றும் தென்கொரிய அணிகளுக்கு இடையிலான போட்டியும், பிரிவு ஜீ பிரிவில் இடம்பெற்றுள்ள பெல்ஜியம் மற்றும் பனாமா அணிகளுக்கு இடையிலான போட்டியும், துனிசியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியும் இன்றைய தினம் இடம்பெறவுள்ளன.