மல்லாகம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் / காவல்துறை அதிகாரியிடமிருந்து விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளது

Tuesday, 19 June 2018 - 21:02

%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D+%2F+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81
யாழ்ப்பாணம் - மல்லாகம் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரியிடமிருந்து சம்பவம் தொடர்பில் விளக்க அறிக்கை ஒன்றை கோரியுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து சூரியனின் செய்திப் பிரிவு வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கமைய, விசாரணைக்கு பொறுப்பான அதிகாரியான காங்கேசன்துறை காவல்துறை பிரிவுக்கு பொறுப்பான காவல்துறை உதவி கண்காணிப்பாளரிடம் குறித்த விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்து சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று சந்தேகத்துக்குரியவர்களிடம் சிங்கள மொழியில் பெறப்பட்ட வாக்குமூலத்தில் முரண்பாட்டு நிலைமை உள்ளதாக காவல்நிலைய பொறுப்பதிகாரியிடம் நேற்று தாம் சுட்டிக்காட்டியதாக அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழ் மொழியில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை தரப்பில் தமக்கு அறிவிக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.