மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனையகத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட சாமர இந்திரஜித் காவற்துறையின் துப்பாக்கிச்சூட்டில் பலியாகியுள்ளார்.
இவர் தன்னிடம் இருந்த கைக்குண்டொன்றின் மூலம் காவற்துறையினரை தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட காவற்துறையினர் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் , அவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் 7 பேர் அடங்கிய கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட போது, காவல்துறையினருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
இதன்போது, காயமடைந்த நிலையில், தலைமறைவாகியிருந்த மூவர், பின்னர் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரக தற்போதைய நிலையில் கராபிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்
அவரது சகோதரரான மகேஷ் மற்றும் மேலும் ஒருவர் குறித்த மருத்துவமனையில் காவற்துறை அதிரடிப்பிரிவின் பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
கொள்ளையின் போது இடம்பெற்ற மோதலில், மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட ஐவர் காயமடைந்தனர்.
இதில், ஒரு காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமாகியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது வெயாங்கொட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரான சாமர இந்திரஜித் கைது செய்யப்பட்ட அதேவேளை, கொள்ளையர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகளுடன், தானியக்க துப்பாக்கி என்பனவும் கைப்பற்றப்பட்டன.
கொள்ளையில் ஏழு பேர் ஈடுபட்டதுடன் அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாமர இந்திரஜித் அத்தனகல்லையில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை , கொள்ளையர்கள் வந்திருந்த உந்துருளியொன்று கொஸ்கொட தாரகவின் தாயின் பெயரில் பதிவாகியுள்ள நிலையில் , குறித்த பெண் காவற்துறையால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் , குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இவர் தன்னிடம் இருந்த கைக்குண்டொன்றின் மூலம் காவற்துறையினரை தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து உடனடியாக செயற்பட்ட காவற்துறையினர் அவர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ள நிலையில் , அவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
மாத்தறையில் உள்ள தங்க ஆபரண விற்பனை நிலையம் ஒன்றில் 7 பேர் அடங்கிய கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட போது, காவல்துறையினருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றது.
இதன்போது, காயமடைந்த நிலையில், தலைமறைவாகியிருந்த மூவர், பின்னர் கராப்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட கொஸ்கொட தாரக தற்போதைய நிலையில் கராபிட்டிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்
அவரது சகோதரரான மகேஷ் மற்றும் மேலும் ஒருவர் குறித்த மருத்துவமனையில் காவற்துறை அதிரடிப்பிரிவின் பாதுகாப்பில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
கொள்ளையின் போது இடம்பெற்ற மோதலில், மூன்று காவல்துறை அதிகாரிகள் உட்பட ஐவர் காயமடைந்தனர்.
இதில், ஒரு காவல்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மரணமாகியுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தின் பின்னர் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது வெயாங்கொட பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபரான சாமர இந்திரஜித் கைது செய்யப்பட்ட அதேவேளை, கொள்ளையர்கள் பயணித்த இரண்டு உந்துருளிகளுடன், தானியக்க துப்பாக்கி என்பனவும் கைப்பற்றப்பட்டன.
கொள்ளையில் ஏழு பேர் ஈடுபட்டதுடன் அவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாமர இந்திரஜித் அத்தனகல்லையில் இடம்பெற்ற இசை நிகழ்வொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி தாக்குதலின் சந்தேக நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை , கொள்ளையர்கள் வந்திருந்த உந்துருளியொன்று கொஸ்கொட தாரகவின் தாயின் பெயரில் பதிவாகியுள்ள நிலையில் , குறித்த பெண் காவற்துறையால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் , குறித்த சந்தேகநபர்கள் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.