ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிரடி..

Sunday, 24 June 2018 - 8:27

%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF..
சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியாக இது அமைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, அந்த அணி 88 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்களை இழந்த நிலையில் உள்ளது.

இதனிடையே ஒப்பந்தத்தை மீறும் வகையில் செயற்பட்ட இலங்கை அணியின் ஜெப்ரி வெண்டசே மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளார்.

இலங்கை அணியின் ஆலோசனையின் பேரிலேயே அவர் அழைக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.