தூக்கில் தொங்கிய 16 வயது சிறுமி

Monday, 25 June 2018 - 11:02

%E0%AE%A4%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+16+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF+
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் - தொட்டியடிப்பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒட்டுசுட்டான் தொட்டியடிப்பகுதியில் வசித்துவரும் 16 வயதான கேதீஸ்வரன் மதுசுதா என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி, வீட்டின் பின்புறம் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் அவதானித்த அயலவர்கள், இது தொடர்பில் ஒட்டுசுட்டான் காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தற்கொலை குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தூக்கில் தொங்கிய சிறுமியின் உடலம் ஒட்டுசுட்டான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் மரண விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் காவல்துறை மேற்கொண்டு வருகிறது.