தனிமையில் இருந்து பாட்டிக்கு இளைஞரால் நடந்த கொடூரம்!!

Monday, 25 June 2018 - 17:02

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21
இந்தியா- உத்திரபிரதேச மாநிலத்தில் 100 வயது பாட்டியொருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவமொன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்ற நிலையில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஜானி என்ற கிராமத்தில் 100 வயது பாட்டி ஒருவர் தனது சகோதரனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குடிபோதையில் அந்த பாட்டியின் வீட்டினுள் நுழைந்த ஒரு இளைஞன் அந்த பாட்டியை பலாத்காரம் செய்துள்ளான்.

இதில் அந்த பாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் , கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், அந்த கொடூரனை கைது செய்துள்ள காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.