இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெற உள்ளது.
காலி மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றதுடன், தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.
இதேவேளை, இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெற உள்ளது.
லண்டனில் இடம்பெறும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாக உள்ளது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காலி மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில், தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 4 விக்கட்டுக்களை இழந்து 111 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
முன்னதாக இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றதுடன், தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்றது.
இதேவேளை, இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெற உள்ளது.
லண்டனில் இடம்பெறும் இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாக உள்ளது.
முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.