வாகன வீதி ஒழுங்கு குற்றங்களுக்காக சம்பவ இடத்திலேயே அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருகிறது.
இதன்படி அதிக வேகமாக வாகனத்தை செலுத்துகின்றவர்களுக்கு விதிக்கப்படும் 1000 ரூபாய் அபராதம் இன்று முதல் 3000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பல போக்குவரத்து சங்கங்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.