2018 ஆம் ஆண்டு பீபா உலக கிண்ண கால்பாந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் ப்ரான்ஸ் மற்றும் குரோசியா ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
ப்ரான்ஸ் அணி இறுதியாக 1998ம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்றது.
குரோசியா அணி முதன் முறையாக இந்த தடவை இறுதி போட்டி ஒன்றில் விளையாடவுள்ளது.