வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ்

Monday, 16 July 2018 - 7:06

+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF++%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
ரஸ்யாவில் இடம்பெற்ற 2018 பீபா உலகக் கிண்ண கால்ப்பந்தாட்டத் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி கைப்பற்றியுள்ளது.

இறுதி போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோஷியா ஆகிய அணிகள் மோதின.

இலங்கை நேரப்படி நேற்று இரவு 8.30க்கு போட்டி ஆரம்பமானது.

போட்டியின் முதல் பாதியில் இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற பிரான்ஸ் அணி, போட்டி முடிவில் 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வெற்றியை தம்வசப்படுத்தியது.

உலக கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் பிரான்ஸ் அணி வெற்றிக்கொள்ளும் இரண்டாவது உலக கிண்ணம் இதுவாகும்.

அந்த அணி 1998ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை முதன்முறையாக வெற்றிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

rn