சுமார் 3 கோடி அமெரிக்க டொலருடன் நான்கு வௌிநாட்டவர்கள் கைது

Tuesday, 17 July 2018 - 15:34

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+3+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
2 கோடியே 75 இலட்சத்து 24 ஆயிரம் அமெரிக்க டொலர் நாணயத்தாள்களுடன் வௌிநாட்டவர்கள் நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்தியாவின் மும்பாய் நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையம் வந்த சீன மற்றும் நேபாள நாட்டவர்கள் நான்கு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இந்நாட்டில் கெசினோ சூதாட்டத்தின் மூலம் குறித்த பணத்தொகையை வென்றுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.