சென்னையில் 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட 17 சந்தேகத்துக்குரியவர்களையும் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதுடைய சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுததப்பட்டுள்ளார்.
7ஆம் தரத்தில் கல்வி கற்கும் அவர், கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குடியிருப்பில் பணியாற்றும் மின்உயர்த்தி ஊழியர்கள் உட்பட மேலும் பலர் இணைந்து குறித்த சிறுமியை, கடந்த சில மாத காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 24 பேரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் 17பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாலறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயதுடைய சிறுமியே துஷ்பிரயோகத்திற்கு உட்படுததப்பட்டுள்ளார்.
7ஆம் தரத்தில் கல்வி கற்கும் அவர், கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த குடியிருப்பில் பணியாற்றும் மின்உயர்த்தி ஊழியர்கள் உட்பட மேலும் பலர் இணைந்து குறித்த சிறுமியை, கடந்த சில மாத காலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, 24 பேரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளில் 17பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பின்னர் அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாலறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.