காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு கிழக்கு மாகாணத்தில்

Tuesday, 17 July 2018 - 21:29

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அடுத்த மாதம் 4ஆம் திகதி அம்பாறை – கல்முனையிலும், 5ஆம் திகதி மட்டக்களப்பிலும் பொதுமக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் காணாமல்போனோர் அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்புகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.