காணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்தக்கட்ட பொதுமக்கள் சந்திப்பு கிழக்கு மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த மாதம் 4ஆம் திகதி அம்பாறை – கல்முனையிலும், 5ஆம் திகதி மட்டக்களப்பிலும் பொதுமக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் காணாமல்போனோர் அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்புகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அடுத்த மாதம் 4ஆம் திகதி அம்பாறை – கல்முனையிலும், 5ஆம் திகதி மட்டக்களப்பிலும் பொதுமக்கள் சந்திப்பு நடத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கடந்த 14ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், 15ஆம் திகதி கிளிநொச்சியிலும் காணாமல்போனோர் அலுவலகத்தின் பொதுமக்கள் சந்திப்புகள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.