இரவில் தனிமையில் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்!!

Wednesday, 18 July 2018 - 15:58

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%21%21+
நடந்து சென்ற இளம்பெண்ணிடம் ​கைப்பேசியை பறித்து சென்ற இரு திருடர்களை வாலிபர் ஒரு துரத்தி சென்று பிடித்த சம்பவமொன்று சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசிக்கும் ப்ரீத்தி(23) என்பவர் நேற்று முன் தினம் இரவு பணிமுடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

சைதாப்பேட்டை மெட்ரோ தொடரூந்து நிலையம் அருகே சென்ற போது அவருக்கு பின்னால் உந்துருளியில் வந்த இருவர், அவரை வழிமறித்து கைப்பேசியை பறிக்க முயன்றனர்.

ஆனால், கைப்பேசியை ப்ரீத்தி இறுக்கமாக பிடித்துக்கொள்ள அவரை தாக்கிய கொள்ளையர்கள் அவரிடமிருந்து கைப்பேசியை பறித்துகொண்டு உந்துருளியில் தப்ப முயன்றனர்.

ஆனால், அவர்களை தப்ப விடாமல் செய்ய அவர்களின் உந்துருளியை பிடித்துகொள்ள, அவர்கள் உந்துருளியை இயக்கி அங்கிருந்து தப்ப முயன்றனர்.

இதனால், வீதியில் ப்ரீத்தி சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு காயம் அடைந்தார்.

வழிபொறுக்க முடியாமல் அவர் பிடியை விட அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதை அனைத்தும் அந்த பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

ஆனால், விக்னேஷ் என்கிற வாலிபர் அந்த கொள்ளையர்களை 4 கி.மீ துரத்தி சென்று தி.நகர் பேருந்து நிலையம் அருகே அவர்களின் உந்துருளி மீது வேகமாக மோதினார்.

இதில், நிலைகுலைந்த கொள்ளையர்களில் ஒருவன் கீழே விழுந்தான்.

அவனை விக்னேஷ் பிடித்து கொண்டார். மற்றொருவன் தப்பி ஓட, அவன் திருடன்.. பிடியுங்கள் என விக்னேஷ் சத்தம் போட அங்கிருந்த பொதுமக்கள் அவனை பிடித்தனர். இருவரையும் மாம்பலம் காவல் நிலையத்தில் விக்னேஷ் ஒப்படைத்தார்.

பிடிபட்ட இருவர் மீது வழிப்பறி, கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவற்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தைரியமாக கொள்ளையர்களை துரத்தி சென்று பிடித்த விக்னேஷை காவற்துறை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.