சொந்த மகனை கொலை செய்த தந்தை!!

Wednesday, 18 July 2018 - 17:41

%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%21%21+
இந்தியா - உத்திரபிரதேசத்தில் எந்நேரமும் கேம் விளையாடிய மகனை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாஸ்தி மாவட்டம் பரஸ்ராம்பூரைச் சேர்ந்தவர் ராகேஷ். இவரது மகன் ராகுல் (13). ராகுல் எந்நேரமும் கைப்பேசியில் கேம் விளையாடிக் கொண்டே இருப்பான்.

ராகுலின் தந்தை பல முறை கண்டித்தும் சிறுவன் தொடர்ந்து கைப்பேசியும் கையுமாகவே சுற்றித் திரிந்துள்ளான்.

சமீபத்தில் சிறுவன் ராகுலை ராகேஷ் அழைத்துள்ளார். கைப்பேசியில் கேம் விளையாடிக் கொண்டிருந்த ராகுல் அவரை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளான்.

இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ் ராகுலை ஓங்கி நெஞ்சிலே மிதித்துள்ளார்.

இரத்த வாந்தி எடுத்த ராகுல் சம்பவ இடத்திலே உயிரிழந்தான். பின் மகனின் உடலை அங்குள்ள காட்டு பகுதியில் புதைத்து விட்டார் ராகேஷ்.

இந்நிலையில் சிறுவன் காணாமல் போனது குறித்து சிறுவனின் தாத்தா காவற்துறையில் முறைப்பாடு செய்தார். காவற்துறையினர் விசாரித்தபோது ராகேஷ் முன்னுக்கு பின்னாக பதிலளித்தார்.

பின்னர் காவற்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மகன் தொடர்ந்து கைப்பேசியில் கேம் விளையாடியதால் அடித்து கொன்றேன் என தெரிவித்தார்.

இதையடுத்து காவற்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தனது சொந்த மகனை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.