இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ் சி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
கிரிக்கட்டின் உன்னதத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய குற்றத்துக்காக டினேஸ் சந்திமாலுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று ஆரம்பமாகும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இலங்கை அணியை சுரங்க லக்மால் வழிநடத்தவுள்ளார்.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் தென்னாப்பிரிக்க அணியில் வெர்னன் ஃப்ளண்டருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவர் இணைக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய போட்டியில் 3 ஓட்டங்களைப் பெற்றால், தென்னாப்பிரிக்காவின் சார்பில் 9 ஆயிரம் ஓட்டங்களைப் பெறும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை ஹசீம் அம்லா பெற்றுக் கொள்வார்.
அதேநேரம் அஞ்சலோ மெத்தீவ்ஸ் 5000 ஓட்டங்களைப் பெறுவதற்கு இன்னும் எட்டு ஓட்டங்களே தேவையாக இருக்கிறது.