எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்களால், 2000 வருடங்கள் பழமையான கருங்கல் பெட்டி ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்டின் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட குழு ஒன்றின் வழிநடத்தலில் இது திறக்கப்பட்டது.
அலக்ஷான்றியாவில் மீட்கப்பட்ட இந்த கருங்கல்பெட்டியில், கிரேக்கத்தின் வரலாற்று நாயகர் மாவீரர் அலக்ஷாண்டரின் எச்சங்கள் இருக்கலாம் என்று இதுவரையில் நம்பப்பட்டது.
எனினும் அதில் சில எழும்பு கூடுகளும், துர்நாற்றம் மிக்க செந்நிறத் திரவமுமே இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.