30 ஆண்டுகளாக உறங்காத நபர்..! வியப்பூட்டும் சம்பவம்!!

Friday, 20 July 2018 - 17:23

30+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D..%21+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21%21
சவூதி அரேபியாவை சேர்ந்த நபரொருவர் கடந்த 30 வருடங்களாக ஒரு நொடி கூட உறங்காமல் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

70 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு உறங்காமல் உள்ளார்.

குறித்த நபர் தமது நிலை குறித்து பல மருத்துவர்களை அணுகியும் அவர்களால் இதுவரை உறுதியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இவர் சவுதி இராணுவத்தில் பணியாற்றிய போது 20 நாட்கள் தொடர்ந்து உறங்காமல் இருந்துள்ளார்.

அதன் பின்னர் இது பழக்கமாகிவிட்டதாம். எனவே, தனது இராணுவ சேவையை முடித்துக்கொண்ட பின்னர் மருத்துவமனைக்கு சென்று விசாரித்துள்ளார்.

இவருக்கு நான்கு நாடுகளை சேர்ந்த சிறப்பு மருத்துவர்களை கொண்டு பரிசோதனை நடத்தியும் இவருக்கு ஏன் தூக்கம்வரவில்லை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.