பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தினம்தோறும் சண்டை, வாரம்தோறும் கமல்ஹாசனின் பஞ்சாயத்து என ஓடிக்கொண்டிருக்கிறது.
தற்போது பிக்பாஸ் வீட்டின் தலைவராக இருக்கும் ஐஸ்வர்யா மற்ற போட்டியாளர்களிடம் எல்லை மீறி மோசமாக நடந்துவருகிறார்.
அவர் பாலாஜி சோபாவில் உட்கார்ந்துகொண்டிருக்கும்போது குப்பைத்தொட்டியை எடுத்து அனைத்து குப்பைகளையும் அவர் மீது கொட்டுகிறார்.
இதனால் மனமுடைந்த அவர் நாமினேஷன் நடக்கும்போது தன்னை தானே நாமினேட் செய்துகொள்கிறார். மேலும் நான் வீட்டை விட்டு போகிறேன் என அவர் கூறுவது டீசரில் காட்டப்படுகிறது.
என்ன நடந்தது என்பது நாளை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தான் தெரியவரும்.