பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஔிப்பரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது 50வது நாளை நெருங்கியுள்ளது.
எனினும் , கடந்த பிக்பாஸ் சீசன் போன்று சீசன் 2 ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் வருகை கொஞ்சம் ஆறுதல்.
இந்நிலையில் , நிகழ்ச்சியின் வரவேற்பை அதிகரிக்கும் கட்டாயத்தில் தொலைக்காட்சி நிர்வாகிகளும் , நிகழ்ச்சி இயக்குனரும் தற்போது செயறப்பட்டு வருகின்றனர்.
அதன் தாக்கம்தான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி.
பாலாஜி, பொன்னம்பலம் உட்பட ஒருசிலரை சமயம் கிடைக்கும்போது பழிவாங்க வேண்டும் என்ற வெறியை மனதில் கொண்டுள்ள ஐஸ்வர்யாவுக்கு நேற்று ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் சர்வாதிகார ராணியாம்.
இதை டாஸ்க் என்று பாராமல் சொந்தப்பகையை பாலாஜி மீது குப்பைகளை கொட்டி தீர்த்து கொண்டார் ஐஸ்வர்யா.
ஷாரிக் தன்னை பயன்படுத்தி கொண்டதாக உளறி கொட்டிய ஐஸ்வர்யா, அவரையும் பழிவாங்கும் வகையில் அவருடைய பொருட்களை நீச்சல் குளத்தில் வீச உத்தரவு போட்டார்.
முழுசா சந்திரமுகியாகவே மாறிவிட்ட ஐஸ்வர்யா, இந்த நிகழ்ச்சியை பெண்கள், குழந்தைகள் பார்க்கின்றார்கள் என்ற நினைப்பு கூட இல்லாமல் எல்லை மீறுவது அராஜகத்தின், அநாகரித்தின் உச்சமாக கருதப்படுகிறது.
மேலும் இந்த ராணி டாஸ்க்கில் நன்றாக நடித்தால் ஐஸ்வர்யாவை அடுத்த வாரமும் யாரும் நாமினேஷன் செய்ய முடியாத வகையில் மேலும் ஒரு சலுகையாம்.
கடந்த சீசனில் கலந்து கொண்ட ஜூலி, காயத்ரி ஆகியோர்களை நல்லவர் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு நிகழ்ச்சி அநாகரீகத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கின்றது.
கமல்ஹாசன் இந்த பிரச்சினையை சரியாக கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த வாரமும் வழக்கம்போல் கமல் தன் சுயபுராணத்தையும், 'விஸ்வரூபம் 2' படத்தின் விளம்பரப்படுத்தலிலும் கண்ணும் கருத்துமாக இருந்தால் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
எனினும் , கடந்த பிக்பாஸ் சீசன் போன்று சீசன் 2 ரசிகர்களிடையே பெரிதாக வரவேற்பை பெறவில்லை.
வார இறுதி நாட்களில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனின் வருகை கொஞ்சம் ஆறுதல்.
இந்நிலையில் , நிகழ்ச்சியின் வரவேற்பை அதிகரிக்கும் கட்டாயத்தில் தொலைக்காட்சி நிர்வாகிகளும் , நிகழ்ச்சி இயக்குனரும் தற்போது செயறப்பட்டு வருகின்றனர்.
அதன் தாக்கம்தான் நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி.
பாலாஜி, பொன்னம்பலம் உட்பட ஒருசிலரை சமயம் கிடைக்கும்போது பழிவாங்க வேண்டும் என்ற வெறியை மனதில் கொண்டுள்ள ஐஸ்வர்யாவுக்கு நேற்று ராணி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுவும் சர்வாதிகார ராணியாம்.
இதை டாஸ்க் என்று பாராமல் சொந்தப்பகையை பாலாஜி மீது குப்பைகளை கொட்டி தீர்த்து கொண்டார் ஐஸ்வர்யா.
ஷாரிக் தன்னை பயன்படுத்தி கொண்டதாக உளறி கொட்டிய ஐஸ்வர்யா, அவரையும் பழிவாங்கும் வகையில் அவருடைய பொருட்களை நீச்சல் குளத்தில் வீச உத்தரவு போட்டார்.
முழுசா சந்திரமுகியாகவே மாறிவிட்ட ஐஸ்வர்யா, இந்த நிகழ்ச்சியை பெண்கள், குழந்தைகள் பார்க்கின்றார்கள் என்ற நினைப்பு கூட இல்லாமல் எல்லை மீறுவது அராஜகத்தின், அநாகரித்தின் உச்சமாக கருதப்படுகிறது.
மேலும் இந்த ராணி டாஸ்க்கில் நன்றாக நடித்தால் ஐஸ்வர்யாவை அடுத்த வாரமும் யாரும் நாமினேஷன் செய்ய முடியாத வகையில் மேலும் ஒரு சலுகையாம்.
கடந்த சீசனில் கலந்து கொண்ட ஜூலி, காயத்ரி ஆகியோர்களை நல்லவர் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு நிகழ்ச்சி அநாகரீகத்தின் உச்சமாக சென்று கொண்டிருக்கின்றது.
கமல்ஹாசன் இந்த பிரச்சினையை சரியாக கையாள வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இந்த வாரமும் வழக்கம்போல் கமல் தன் சுயபுராணத்தையும், 'விஸ்வரூபம் 2' படத்தின் விளம்பரப்படுத்தலிலும் கண்ணும் கருத்துமாக இருந்தால் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் இழக்க வேண்டிய நிலை தான் ஏற்படும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.