பாகிஸ்தான் நாட்டின் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவரை அவரது கணவர் சுட்டு கொலை செய்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவர் அந்நாட்டின் கைபர் பக்துங்குவா என்ற பகுதியில் அவருடைய சகோதரருடன் வசித்து வந்தார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த அவரது கணவர் தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ரேஷ்மாவின் கணவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ரேஷ்மாவை சுட்டு கொலை செய்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ரேஷ்மாவின் கணவர் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டின் நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா என்பவர் அந்நாட்டின் கைபர் பக்துங்குவா என்ற பகுதியில் அவருடைய சகோதரருடன் வசித்து வந்தார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அவர் தனது சகோதரர் வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று ரேஷ்மாவின் வீட்டிற்கு வந்த அவரது கணவர் தன்னுடன் வருமாறு அழைத்ததாகவும், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி ரேஷ்மாவின் கணவர் திடீரென துப்பாக்கியை எடுத்து ரேஷ்மாவை சுட்டு கொலை செய்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ரேஷ்மாவின் கணவர் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.