இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக புதுடில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
93 வயதுடைய வாஜ்பாய் கடந்த 9 வாரங்களாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என நேற்றைய தினம் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் வாஜ்பாயின் உடல்நிலையை குறித்து விசாரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.