மசாஜ் நிலையத்தில் தாதியர் உடையணிந்து உடம்மை விற்கும் கிராமத்து யுவதியின் கண்ணீர்க் கதை!!

Thursday, 16 August 2018 - 17:24

%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%21%21
மசாஜ் செண்டர் என்ற பெயரில் பல விபசார விடுதிகள் இயங்கி வருகின்றன.

இதற்கு செல்வதற்காகவே இளைஞர்கள் பொய் கூறுவதும் கொள்ளையில் ஈடுபடுவதுமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாதியர்கள் அணியும் ஆடையை வெளிமாவட்டங்களில் வசிக்கும் வறுமையான பெண்களுக்கு அணிவித்து அவர்களை பாலியல் வர்த்தகத்தில் பல வர்த்தர்கள் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஸ்பா என அழைக்கப்படும் மசாஜ் செண்டர்களில் நடக்கும் விடயங்களை வெளிக்கொணர எமது செய்திபிரிவு கொழும்பு நாவல பகுதியில் இயங்கும் ஆயுர்வேத மசாஜ் செண்டர் ஒன்றுக்கு விரைந்தது.

வெள்ளைக்கார பெண்கள் மசாஜ் செய்வது போன்ற ஆடம்பரமான பெண்களை கொண்ட விளம்பர பலகை அந்த பலகையில் ஒரு மணித்தியாலத்திற்கு 1000 ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது.

எமது செய்தி பிரிவினை சேர்ந்த கிருபா என்பவர் குறித்த தசைபிடிப்பு நிலையத்திற்கு சென்றார்.

அந்த அனுபவத்தை விபரிக்கும் கிருபா.....

குறித்த வர்த்தக நிலையத்தில் மேசையின் மீது நித்திரைக்கொண்டிருந்த கெஷ்சியர் பெண் சற்றே எழுந்து....

கெஷ்சியர்: சேர் எப்பொய்மென்ட் போட்டிருக்கிங்களா என கேட்டார்.

கிருபா : இல்லை நான் பதிவு செய்யவில்லை...

கெஷ்சியர் :அப்படியென்றால் நாங்கள் சிலக்சன் செய்வோம் சேர்...

என தெரிவித்து அருகில் வந்த யுவதி ஒருவரிடம் கஸ்ட்டமர் ஒருவர் வந்திருக்கார். அனைவரையும் தயாராகி வரச்சொல்.... என பணித்தாள்.

உடனே குறித்த யுவதி ஓடிச்சென்று அருகிலுள்ள அறைநோக்கி சென்று கதவை கொஞ்சமாக திறந்து ஏதோ முணுமுணுத்தாள்.

சில நிமிடங்களில்... வாங்க சேர் என அழைத்துக்கொண்டு அருகிலுள்ள அறைக்கு அழைத்து சென்றார்.

அங்கு சுமார் 15 பெண்கள் வரை அமர்ந்திருந்தனர்.. அவர்கள் என்னை நோக்கி  தன்னை தெரிவு செய்யுங்கள் என வெளிப்படையாக கூறாமல்.. சைகைகளின் மூலம் சிரிப்பதும்... உதட்டை அசைத்து முத்தம் கொடுப்பதும் போன்று சமிக்ஞைகளில் தெரிவித்தனர்.

தாதியர்கள் அணியும் சீருடையினை போன்று அனைவரும் சற்று குட்டையாக அணிந்து கொண்டு காணப்பட்டனர்.

அந்த பெண்கள்..... பெண்கள் அணியும் உள்ளாடையை மாத்திரம் அணித்துக்கொண்டு அதற்கு மேலதிகமாக தாதியர்கள் அணியும் சீருடையை அணிந்திருந்தனர்.

கெஷ்சியர் : சேர் நீங்க.... யாரை தெரிவு செய்ய போறீங்க.. என இரகசியமாக கேட்டார்.

கிருபா: சற்று அமைதியாக நின்றுக்கொண்டிருந்தபடி.. இன்னும் கொஞ்சம் பார்க்கலாமே.....

கெஷ்சியர் : அப்படினா சேர் இன்னும் கொஞ்சம் நேரம் வெய்ட் பண்ணுங்க.. அதுவரைக்கும் இங்க உட்காருங்க...கதைத்துக்கொண்டிருக்கலாம்

கெஷ்சியர் : இப்போ எத்தனை பேர் பிசியா இருக்காங்க...

பணிபுரியும் பெண் : ஐந்து பேர் பிசியா இருக்காங்க... மெடம்

கிருபா: இங்கு எத்தனை பேர் வேலை செய்றாங்க மெடம்... அவங்க எல்லாம் பிசியா...

கெஷ்சியர்... சுமார் 25 பேர் வேலை செய்றாங்க...

கிருபா : புதிதா யாரும் வேலைக்கு சேர்ந்திருக்காங்களா...

கெஷ்சியர் : ஆம் சேர் இரண்டு பேர் வந்திருக்காங்க... அவங்களில் யாரு பிசியா இருங்காங்களோ தெரியல.... அதுல ஒரு பெண் குருநாகல் பகுதியில் இருக்கின்றாள்... அவள் பெயர் வர்சா..மற்றொரு பிள்ளை எம்பிலிபிட்டி பகுதியை சேர்ந்த மது என்ற பெண்... ஆனால் மது கொஞ்சம் பாவம் சின்னபிள்ளை.. குடும்ப கஷ்ட்டத்திற்காக வந்திருக்கின்றாள்.

கிருபா : ஏன் அனைவருக்கும் தாதியர்கள் சீருடைகள் அணிவித்திருக்கின்றீர்கள்.

கெஷ்சியர் : அந்த சீருடையையே அனைவரும் விரும்புறாங்க... அதுல என்னதான இருக்கோ தெரியல சேர்... அடுத்தது ஆயுர்வேத மசாஜ் செண்டர் என்ற படியால் அவர்களுக்கு தாதியர் உடை வழங்கப்பட்டுள்ளது.

கிருபா : உங்கட நிறுவனம் இங்கு மாத்திரமா உள்ளது.

கெஷசியர் : இங்கு மாத்திரம் இல்லை சேர் எங்களுக்கு 12 கிளைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றுதான் நாவலையில் உள்ள பிரான்ஞ்ச் ஆகும்.

இதன்போது டவல் மாத்திரம் அணிந்துக்கொண்டு யுவதி ஒருவர் அப்பகுதியை கடந்து சென்றார்.

கிருபா : மெடம் யார் அந்த பெண்...

கெஷ்சியம் : நான் சொன்னன்.... புதுசா வந்த வர்ஷாதான் அது... வேலையை சீக்கிரமா முடிச்சிட்டாள்.. அதுதான் ரூமுக்கு வந்திட்டாள்.

கிருபா: எனக்கு அப்படினா விளங்கல மெடம்... சீக்கிரமா முடிச்சிட்டான்னு சொல்றிங்க. அப்படி அந்த கேள் என்ன செய்தாள்.

கெஷ்சியர் : சிலர் உடம்பு முழுவதையும் மசாஜ் செய்துகொள்ள வருவார்கள். சிலர் பீலிங் என்பதற்காக மாத்திரம் வருவாங்க.. இரண்டையும் கவனிக்கதான் வேண்டும். சிலர் விரைவில் செய்து முடிச்சிட்டா மசாஜ் செய்யும் அறையிலிருந்து போக சொல்லி விடுவார்கள்.

கிருபா: மேடம் .... இந்த நிலையத்தில் வைத்தியர்கள் உள்ளார்களா...

கெஷ்சியர் : உள்ளார்கள் சேர்.. அவர்கள் இப்போ கொஞ்சம் வெளியில் சென்றுள்ளனர்.

கிருபா: நேரம் செல்கிறது... வேறு யாரெல்லாம் இருக்கிறார்கள்.

கெஷ்சியர்: அப்படினா சேர் நீங்க இன்னொரு நாளைக்கு வாங்க... நா புக் பண்ணி வைக்கிறேன்...

கிருபா : இல்ல மெடம் எனக்கு இன்றைக்கே தேவை....

கெஷ்சியர் : வர்ஷா.... வர்ஷா.... இந்த சேர் கூட இரண்டாவது மாடிக்கு போ.... வாங்க சேர் போகலாம்.

கிருபா : வர்ஷா இந்த ரூம் எல்லாம் ஏன் மூடி இருக்கு

வர்ஷா : அந்த ரூம்ல எல்லாம் கஸ்ட்டமர்ஸ் இருங்காங்க சேர்..

கிருபா : அப்படினா... வேறேதும் இங்க நடக்குதா..?

வர்ஷா : அப்படி இல்ல சேர்... உங்களுக்கு விருப்பம்னா நீங்களும்... கேட்கலாம்.

கிருபா : நான் என்ன கேட்கனும்னு எதிர்பார்க்கிறீங்க..

வர்ஷா : டிப்ஸ் கொடுத்தா உங்களுக்காக நா என்னையே தருவேன் சேர்.

கிருபா : ஏன் இந்த தொழிலை செய்றீங்க வர்ஷா...

வர்ஷா : சிலர் எங்களை வீணாக்கிட்டாங்க... சமூகத்தில மரியாதை இல்ல... சிலர் குடும்ப கஸ்ட்டத்திற்காக கல்வி அறிவு இல்லாம இதுக்கு வந்திட்டாங்க. சிலர் பண ஆசைக்காக வந்திட்டாங்க. இப்ப எல்லாம் பைத்தியங்கள் போல என்ன செய்வது என்று தெரியாம அலையுறாங்க... முடிஞ்சு போன வாழ்க்கைய பத்தி கதைக்கிறதுல பயன் இல்ல. நீங்க வந்த வேலைய பாருங்க....

கிருபா: உங்களுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுத்தா செய்வீங்களா....

வர்ஷா : செய்வன் சார்....

கிருபா : நீங்க என்ன படிச்சிருக்கீங்க.... எங்கிருந்தெல்லாம் பெண்கள் வந்திருக்காங்க.... கொஞ்சம் சொல்லுவீங்களா.

வர்ஷா : நான் உயர் தரத்தில் 3 பாடங்கள் சித்தி பெற்றுள்ளேன். ஒரு b ஒரு c ஒரு s எனது பெறுபேறாகும். அப்புறம் என்ன கேட்டீங்க.. எங்கிருந்து வாராங்க என்று.... அப்பாவி யுவதிகள் மலையத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கட்டாயப்படுத்தி வேலையில ஈடுபடுத்துறாங்க... அது மட்டும் இல்ல விதவை பெண்கள சீரழிக்கிறாங்க. எங்களுக்கு சிறிய தொகை தான் கிடைக்கும்... நீங்க வரும் போது கொடுத்த 1000 ரூபாய் அவங்க எடுத்திப்பாங்க.. எங்களுக்கு நீங்க கொடுக்கிற 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் டிப்ஸ் தான் சேர் வாழ்க்கைக்கு சோறு போடுது.

கிருபா : வர்ஷா இதை பிடிங்க... நாங்க மசாஜ் செய்றதுக்கோ அல்லது வேற எதற்கும் வரல.... சும்மா தெரிஞ்சிகிறதுக்குதான் நாங்கள் ஊடகத்தில் இருந்து வந்துள்ளோம்... நாங்கள் உங்களை பற்றி எந்த இடத்திலும் கூறமாட்டோம்.... சமூகத்திலுள்ள பெண்களுக்கு ஏதாவது கூற விரும்புகிறீர்களா...?

வர்ஷா : உங்களோட வயிற்று பிழைப்பிற்காக எதை வேண்டுமானாலும் செய்ங்க... உடம்ப மாத்திரம் விற்று வாழ்ந்திடாதிங்க..... கண்ணீருடன் அலுவலகம் திரும்பியது எமது செய்தி பிரிவு.