வடக்கு-கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி கூட்டத்திற்கு தமிழ் பிரதிநிதிகளுக்கு அழைப்பு

Tuesday, 21 August 2018 - 8:10

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்த தடைவை நடைபெறுகின்ற வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலணியின் அங்கத்துவர் ஒருவர் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் இரண்டாவது கூட்டம் எதிர்வரும் 27ம் திகதி கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதன் முதலாவது கூட்டம் கடந்த மாதம் 30ம் திகதி நடைபெற்றிருந்த போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

எனினும் இந்தமுறை ஜனாதிபதி அறிவுறுத்தலுக்கு அமைய, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய அனைத்து தமிழ் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், இந்த கூட்டத்துக்கு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர் கடந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.