சிறைச்சாலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

Tuesday, 21 August 2018 - 10:53

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
சிறைச்சாலைகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிபடையினரை கண்காணிப்பில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தண்டனைகளை அனுபவித்து வரும் கைதிகளனினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்பாட்டங்கள் அல்லது எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் நேற்றைய தினம் பெண் கைதிகள் நடத்திய எதிர்ப்பு நடவடிக்கையின் போது 8 சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்தனர்.

அத்துடன் 3 பெண் கைதிகளுடன் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறான நிலைமைகளை எதிர்காலத்தில் எதிர்கொள்வதற்கே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.