முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக்கடி சில்வா மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

Thursday, 20 September 2018 - 20:18

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81
கடந்த மார்ச் மாதம் கண்டி – திகன நகரில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தின் மூளையாக செயற்பட்டவர் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் நாலக்கடி சில்வா என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிங்களே நாம் தேசிய இயக்கம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக இன்று காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போதே இயக்கத்தின் தலைவர் ஜபுருவேல சந்திரரத்ன தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்த இயக்கத்தின் பிரதிநிதிகள் குறித்த சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் கடிதம் ஒன்றையும் கையளித்துள்ளனர்.