கிழக்கை உலுக்கியுள்ள இளம் தமிழ் பெண்ணின் மரணம்..!!

Saturday, 22 September 2018 - 14:40

%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D..%21%21
காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவன் தெரிவித்துள்ளார்

கணவன் மேலும் தெரிவிக்கையில் எமக்கு திருமணம் ஆகி ஐந்து மாதங்களே ஆகிறது.

எனது மனைவி விரிவுரையாளர் எனபதால் கிழமையில் ஐந்து நாட்கள் திருகோணமலையில் இருப்பார்.

நான் கிளிநொச்சியில் வேலை பார்ப்பதால் நான் கிளிநொச்சியில் இருப்பேன்.

வார இறுதி நாட்களில் நான் திருகோணமலை செல்வேன் அல்லது எனது மனைவி கைச்சிலை மடுவில் உள்ள எமது வீட்டுக்கு வருவார்.

கடந்த புதன் கிழமை எனக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பி இருந்தார் இரண்டு நாள் நான் விடுமுறை எடுத்துக்கொண்டு வருகிறேன் எனது அம்மா வீட்டுக்கும் செல்வோம் என தெரிவித்தார்.

அதன் பின்னர் அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை.

நான் நினைத்தேன், சிலவேளை வேலைபளு எனில் அவரது அம்மா வீட்டுக்கு சென்றிருப்பார் என பின்னர்தான் அவரது அம்மாவும் அங்கு வரவில்லை காணவில்லை எனச் சொன்னார்.

பின்னர் அவரது கைப்பை திருகோணமலை நகர கடற்கரைப் பகுதியில் இருப்பதாகவும், சடலம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். எனது மனைவி தற்கொலை செய்யக் கூடியவள் அல்ல.

அதற்கான எந்த தேவையும் இல்லை. இந்த மரணத்தில் எனக்கு சந்தேகம் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

குறித்த விரிவுரையாளரின் மரணத்துடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகத்தில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.