இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி மோதும் போட்டி..

Sunday, 23 September 2018 - 13:02

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF..
ஆசிய கிண்ண கிரிக்கட் தொடரின் சுப்பர்-4 சுற்றின் மேலும் இரண்டு போட்டிகள் இன்று இடம்பெற உள்ளன.
 
இதற்கமைய இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் டுபாயில் இடம்பெறவுள்ள போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
 
ஆசிய கிண்ணத் தொடரில் இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது போட்டியில், இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றிருந்தது.
 
இந்த நிலையில், இன்றைய தினம் இடம்பெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் நோக்குடன் இரண்டு அணிகளும் கடும் முயற்சிகளை மேற்கொள்ள உள்ளன.
 
இதேநேரம், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபியில் பிற்பகல் 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.