திட்டம் போட்டு கணவரை படுகொலை செய்த மனைவி!!

Monday, 24 September 2018 - 9:00

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%21%21
கள்ளக்காதலனுடன் இணைந்து தனது கணவரை மனைவியே கொலை செய்த சம்பவமொன்று தமிழகம் தேனி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.

கடந்த 18ஆம் திகதி கொடைக்கானல் மலைச்சாலையில் டம்டம் பாறை அருகே அழுகிய நிலையில் கழுத்தறுக்கப்பட்ட ஆணின் சடலத்தை காவற்துறையினர் மீட்டனர்.

விசாரணையில் அவர் கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த முகம்மது சமீர் என்பதும் அவரது மனைவி பர்தோஷ், தனது கள்ளக்காதலன் ஆசிப் என்பவனுடன் சேர்ந்து அவரைக் கொன்று வீசியதும் தெரியவந்துள்ளது.

முகம்மது சமீர் - பர்தோஷ் தம்பதியருக்கு மூன்று மாத குழந்தை உள்ள நிலையில், பர்தோஷுக்கு ஆசிப் என்ற சாரதியொருவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

தங்களது காதலுக்கு கணவர் தடையாக இருப்பதாக எண்ணி அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த பர்தோஷ், கடந்த 14ஆம் திகதி சுற்றுலா செல்லலாம் எனக் கூறி முகம்மது சமீரை ஆசிப்பின் உந்துருளியிலேயே கொடைக்கானல் அழைத்து வந்துள்ளார்.

கொடைக்கானலிலேயே வைத்து முகம்மது சமீரை கொலை செய்த இருவரும் டம்டம் பாறை அருகே சடலத்தை வீசிச் சென்றுள்ளனர்.

பின்னர் மங்களூர் வந்த பர்தோஷ், மூன்று மாத குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு 60 சவரன் நகை மற்றும் பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக முகம்மது சமீரின் உறவினர் கூறுகிறார்.

தேவதானப்பட்டி காவல்துறையினர் தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள பர்தோஷ் - ஆசிப் ஜோடியை தேடி வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.